Posts

Showing posts from July, 2024

கல்பனாவின் காதல்

                                                            கல்பனாவின் காதல் [1] கல்பனாவும் அவள் தோழி ராதாவும் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒருநாள் சந்தித்து, ஒரு குளத்தருகே உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது, கல்பனா,” ராதா, அங்கே பார். அங்கே ரெண்டு  பறவைகள் சேர்ந்து போயிட்டிருக்கும் வழியில ஒரு தாமரைப்பூ இருக்குதே, தெரியுதா?“ என்றாள். “பாத்தேன். அந்தப் பறவைகளின் பெயர் என்ன? அவை இரண்டும், ஒன்றை ஒன்று பிரியாமல் போவுதே!” என்று ஆச்சர்யப்பட்டாள் ராதா. ”அந்தப் பறவைகளுக்குப் பெயர் மகன்றில். அவற்றில் ஒன்று ஆண்; மற்றொன்று பெண். அவை ரெண்டும் மனமொத்த கணவன் மனைவி போல், ஒன்றைவிட்டு ஒன்று பிரியாமல் எப்பொழுதும் ஜோடியாகத்தான் போகும். அவை போகும் வழியில் ஒரு பூ இருந்தால், அந்தப் பூவைத் தாண்டிப் போவதற்காக  அந்தப் பறவைகள் சில விநாடிகள் பிரிந்து சென்று மீண்டும் சேர்ந்தே செல்லும்.  பூவைக் கடப்பதற்காகப் பிரிந்திருக்கும் அந்த ஒவ்வொரு விநாடியும் அந்தப் பறவைகளுக்கு ஒரு வருஷம் போல் இருக்கும்னு படிச்சிருக்கேன்.” என்று சொல்லிவிட்டுக் கல்பானா மௌனமாக இருந்தாள். “கல்பனா, ஏன் இப்படி மௌனமா இருக்கே? மௌனம் ம

சுமதிக்கு மட்டும் ஏகாதசி

  சுமதிக்கு மட்டும் ஏகாதசி [1] சுமதியைப் பார்த்துப் பல நாட்களாகிவிட்டன என்று நினைத்த தேவிகா அவளைப் பார்ப்பதற்காக அவள் வீட்டுக்குப் போனாள். சுமதியைப் பார்த்த தேவிகா பெரும் அதிர்ச்சி அடைந்தாள். சுமதி எப்பொழுதும் நன்றாக உடையுடுத்திக்கொண்டு, தன்னைச் சிறப்பாக அலங்கரித்துக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் உடையவள். அத்தகையவள், அன்று, அழுக்குப் படிந்த புடவையை அலங்கோலமாகக் கட்டிக்கொண்டு, தலை வாராமல், முகம் கழுவாமல், தூக்கத்திலிருந்து அப்பொழுதுதான் கண் விழித்ததுபோல் படுக்கையில் படுத்திருந்தாள்.  சுமதியைப் பார்த்த தேவிகா அதிர்ச்சியோடு. “ஏ, சுமதி உனக்கு என்னடி ஆச்சு உனக்கு? ஏன் இப்படி இருக்கே? உடம்பு சரியில்லையா?” என்று கவலையோடு கேட்டாள். “உடம்பெல்லாம் நல்லாதான் இருக்கு. நேத்திக்கி ராத்திரி தூக்கமே வரல்லை. இந்த ஊர்லே இருக்கிற எல்லாரும் ராத்திரி பூரா தூங்குறாங்க. மனுஷங்க மட்டுமில்ல. ஆடு, மாடு, நாய், நரி எல்லாம்கூடத் தூங்குது. நான் ஒருத்தி மட்டும் ராத்திரி பூராவும் முழிச்சுக்கிட்டு இருந்தேன்.  எல்லாரும் தூங்குறாங்க. எனக்கு மட்டும் ஏகாதசி. நேத்திக்கு மட்டுமில்ல. கொஞ்ச நாளாவே  இப்படித்தான்.  எல்லா நாளும்

தாவத் தெரிந்த குரங்கு

                                                        அன்றைய வகுப்புகள் எல்லாம் முடிந்த பிறகு , வீட்டிற்குப் போவதற்காக சுந்தர் தன்னுடைய மோட்டார் சைக்கிள் இருந்த இடத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தான் . அங்கே , சற்று தூரத்தில் ஒரு மரத்தடியில் சில பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள் . அவர்களில் ஒருத்தி ஏதோ பாடிக்கொண்டிருந்தாள் . மற்றொருத்தி , அவளைப் பார்த்து , “ ஏ , திலகா , எல்லா பாட்டும் பாடுறியே , உங்க பாட்டி காலத்துக் காதல் பாட்டு ஒண்ணு பாடேன் .” என்றாள் . உடனே , திலகா , “ அத்தான் என் அத்தான் ” என்ற 1961 ஆம் ஆண்டு வெளிவந்த , பாவ மன்னிப்பு என்ற படத்தில் , கவியரசு கண்ணதாசன் எழுதி , மெல்லிசை மன்னர்களில் ஒருவரான எம் . எஸ் . விஸ்வநாதன் இசை அமைத்து , இசைக்குயில் பி . சுஷீலா பாடிய பாடலைப் பாடினாள் . திலகா தன்னை நோக்கி அந்தப் பாடலைப் பாடியதாக சுந்தருக்குத் தோன்றியது . அது அவனுடைய கற்பனைதான் . அவனையோ அல்லது அவன் அங்கு நிற்பதோ திலகாவுக்குத் தெரியாது ; அவளுக்கு மட்டுமல்ல ,   அங்கிருந்த எந்தப் பெண்ணுக்கும் தெரியாது .   அந்தக் கூ