Posts

பலாப்பழத்தைப் பக்குவமாகப் பறித்த பலராமன்

                                     பலாப்பழத்தைப் பக்குவமாகப் பறித்த பலராமன் வழக்கமாகச் சந்திக்கும் இடத்தில் நந்தினியின் வருகைக்காகக் காத்திருந்தான் பலராமன். எப்பொழுதும் நந்தினியும் அவள் தோழி கமலாவும் சேர்ந்தே வருவார்கள். அன்று, வெகுநேரம் கழித்து, கமலா மட்டும் வந்தாள். ”நந்தினி வரவில்லையா?” என்று கமலாவைக் கேட்டான் பலராமன். ”நந்தினி இனிமேல் வரமாட்டாள்.” என்று சொல்லிப் பலராமனை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினாள் கமலா. “ஏன்? அவளுக்கு என்னாச்சு?” என்று ஆச்சர்யத்தோடும் சற்று பயத்தோடும் பலராமன் கேட்டான். “இப்ப காலேஜ் எல்லாம் முடிஞ்சு போச்சு. அதனாலே அவ இப்ப எங்கேயாவது வெளியில போகணுமுன்னா, அவ அம்மா லீலாவின் ஆயிரம் கேள்விகளுக்குப் பதில் சொல்லணும். அதுக்குப் பயந்துதான் அவ வரல்லை.   நீ காத்திருப்பியே என்று உன்னிடம் தன் சூழ்நிலையைப் பற்றிச் சொல்லச் சொல்லி என்னை அனுப்பினாள்.” என்று விளக்கம் அளித்தாள் கமலா. ”சொல்ல வேண்டியதை நந்தினி ஃபோன்ல சொல்லியிருக்கலாமே?” என்று கேட்டான் பலராமன். ”சொல்ல வேண்டிய செய்தி நிறைய இருக்கு, அதனாலேதான் என்னை அனுப்பினாள்.”  என்றாள் கமலா. கமலா சொல்லப் போவதைக் கேட்பதற்குப் 

மறந்தனா அல்லது மறைந்தானா?

  மறந்தனா அல்லது மறைந்தானா? சென்னையில் உள்ள கலைமகள் கலைக்கூடத்தில் பரதநாட்டியம் கற்று, நாட்டியக்கலையில் தேர்ச்சிபெற்ற மாணவி சத்யாவின் பரதநாட்டிய நிகழ்ச்சி   பத்மஸ்ரீ நர்த்தகி சிவகாமி தலைமையில், முதலமைச்சர் ஜெயச்சந்திரிகா அவர்கள் முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சத்யாவின் நாட்டிய நிகழ்ச்சியில், மிருதங்கம், வயலின், புல்லாங்குழல் ஆகிய இசைக்கருவிகள் ஒலிக்க சத்யாவின் நண்பன் முரளியின் பாட்டுக்கேற்ப சத்யா நடனம் ஆடினாள். அந்த நாட்டிய நிகழ்ச்சி  கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. சத்யாவின் முகபாவங்கள், நளினமான நடனம் ஆகியவற்றைக் கண்டு மகிழ்ந்த, நடனக்கலையை நன்கறிந்த முதலமைச்சர், ”சிலப்பதிகாரத்தில், மாதவியின் அரங்கேற்றத்தில் அவள் நடனம் ஆடியது ஒரு பூங்கொடி வந்து அரங்கிலே தோன்றி நாட்டியக்கலை நூல்களில் கூறப்பட்டுள்ள நெறிமுறைகளை எல்லாம் சரியாகக் கடைப்பிடித்து ஆடியதைப்போல் இருந்தது என்று இளங்கோவடிகள் எழுதியுள்ளாதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். இன்று சத்யாவின் நடனம் அதுபோல் இருந்தது.” என்று கூறிச் சத்யாவைப் புகழ்ந்து, ’நாட்டிய வித்தகி’ என்று பட்டமளித்துப் பொன்னாடை போர்த்திப் பாராட்டினார். முரளியின்

கல்பனாவின் காதல்

                                                            கல்பனாவின் காதல் [1] கல்பனாவும் அவள் தோழி ராதாவும் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒருநாள் சந்தித்து, ஒரு குளத்தருகே உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது, கல்பனா,” ராதா, அங்கே பார். அங்கே ரெண்டு  பறவைகள் சேர்ந்து போயிட்டிருக்கும் வழியில ஒரு தாமரைப்பூ இருக்குதே, தெரியுதா?“ என்றாள். “பாத்தேன். அந்தப் பறவைகளின் பெயர் என்ன? அவை இரண்டும், ஒன்றை ஒன்று பிரியாமல் போவுதே!” என்று ஆச்சர்யப்பட்டாள் ராதா. ”அந்தப் பறவைகளுக்குப் பெயர் மகன்றில். அவற்றில் ஒன்று ஆண்; மற்றொன்று பெண். அவை ரெண்டும் மனமொத்த கணவன் மனைவி போல், ஒன்றைவிட்டு ஒன்று பிரியாமல் எப்பொழுதும் ஜோடியாகத்தான் போகும். அவை போகும் வழியில் ஒரு பூ இருந்தால், அந்தப் பூவைத் தாண்டிப் போவதற்காக  அந்தப் பறவைகள் சில விநாடிகள் பிரிந்து சென்று மீண்டும் சேர்ந்தே செல்லும்.  பூவைக் கடப்பதற்காகப் பிரிந்திருக்கும் அந்த ஒவ்வொரு விநாடியும் அந்தப் பறவைகளுக்கு ஒரு வருஷம் போல் இருக்கும்னு படிச்சிருக்கேன்.” என்று சொல்லிவிட்டுக் கல்பானா மௌனமாக இருந்தாள். “கல்பனா, ஏன் இப்படி மௌனமா இருக்கே? மௌனம் ம

சுமதிக்கு மட்டும் ஏகாதசி

  சுமதிக்கு மட்டும் ஏகாதசி [1] சுமதியைப் பார்த்துப் பல நாட்களாகிவிட்டன என்று நினைத்த தேவிகா அவளைப் பார்ப்பதற்காக அவள் வீட்டுக்குப் போனாள். சுமதியைப் பார்த்த தேவிகா பெரும் அதிர்ச்சி அடைந்தாள். சுமதி எப்பொழுதும் நன்றாக உடையுடுத்திக்கொண்டு, தன்னைச் சிறப்பாக அலங்கரித்துக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் உடையவள். அத்தகையவள், அன்று, அழுக்குப் படிந்த புடவையை அலங்கோலமாகக் கட்டிக்கொண்டு, தலை வாராமல், முகம் கழுவாமல், தூக்கத்திலிருந்து அப்பொழுதுதான் கண் விழித்ததுபோல் படுக்கையில் படுத்திருந்தாள்.  சுமதியைப் பார்த்த தேவிகா அதிர்ச்சியோடு. “ஏ, சுமதி உனக்கு என்னடி ஆச்சு உனக்கு? ஏன் இப்படி இருக்கே? உடம்பு சரியில்லையா?” என்று கவலையோடு கேட்டாள். “உடம்பெல்லாம் நல்லாதான் இருக்கு. நேத்திக்கி ராத்திரி தூக்கமே வரல்லை. இந்த ஊர்லே இருக்கிற எல்லாரும் ராத்திரி பூரா தூங்குறாங்க. மனுஷங்க மட்டுமில்ல. ஆடு, மாடு, நாய், நரி எல்லாம்கூடத் தூங்குது. நான் ஒருத்தி மட்டும் ராத்திரி பூராவும் முழிச்சுக்கிட்டு இருந்தேன்.  எல்லாரும் தூங்குறாங்க. எனக்கு மட்டும் ஏகாதசி. நேத்திக்கு மட்டுமில்ல. கொஞ்ச நாளாவே  இப்படித்தான்.  எல்லா நாளும்