Posts

Showing posts from June, 2024

ராஜயோகம்

                                                                            ராஜயோகம் ”அம்மா, நான் சாயங்காலம் வீட்டுக்கு வர்ரதுக்கு நாழியாகும்” என்றாள் பானு.   “இந்தப் பொண்ணு, ஆபிசிலே என்னதான் பண்ணுவாளோ? கொஞ்ச நாளாவே இப்படித்தான். நாழியாகும்னு சொல்லிட்டு, இருட்னதுக்கு அப்புரம்தான் வீட்டுக்கு வர்ரா. எனக்குதான் கவலையா இருக்கு. அவ அப்பா எதையுமே கண்டுக்கிறதில்லை.  கடவுள்தான் காப்பத்தணும்.” என்று தனக்குத்தானே கூறிக்கொண்டாள் பானுவின் அம்மா கமலம். பி. காம். படித்து முடித்துவிட்டு, பானு ஒரு பேங்க்லே மேனேஜராக வேலை பார்க்கிறாள். கடந்த சில மாதங்களாக அவள் பேங்க்குக்கு அடிக்கடி வரும் ராஜ் என்ற ஒரு இளைஞனோடு நெருங்கிப் பழகுகிறாள். பானுவின் பேங்க்குக்கு அருகில் உள்ள ஒரு கம்புயூடட்ர் நிறுவனத்தில் ராஜ் பணிபுரிகிறான். ராஜ் மிகவும் புத்திசாலி. அவன் கம்புயூட்டர் துறையில், IIT யில் Ph. D படித்து, மாடர்ண் டெக்னாலஜீஸ் என்ற நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் இருக்கிறான். அவனுடைய நிறுவனத்தில் அவனுக்கு நல்ல பெயர்; கை நிறைய சம்பளம். அவனுக்கு பானுவை மிகவும் பிடித்திருக்கிறது. பானுவைப் பார்ப்பதற்காகவே அவள் வேலை பார்க

மோர்க்குழம்பு செய்த மேஜிக்

                                           மோர்க்குழம்பு செய்த மேஜிக்  முனைவர் இர. பிரபாகரன் ”அம்மா, நான் ஒரு பலகாரம் பண்ணப் போறேன்” என்றாள் மைதிலி. “உனக்கு ஒண்ணும் செய்யத் தெரியாது. போய் படிக்கிற வேலையைப் பாரு.” என்றாள் மைதிலியின் அம்மா மீனாட்சி. மைதிலி ஒரு வசதியான குடும்பத்துப் பெண். அவளுடைய பெற்றோருக்கு மைதிலி ஒரே பெண். செல்லமாக வளர்ந்தவள். மைதிலியின் அப்பா சாமிநாதன், சென்னையில் ஒரு பெரிய நிறுவனத்தில் உயர்ந்த உத்தியோகத்தில் இருக்கிறார்; மிகவும் கண்டிப்பானவர். அவரைக் கண்டாலே, அவரிடம் வேலைபார்ப்பவர்கள் பயப்படுவார்கள். அவர் மனைவிக்குக்கூட அவரிடம் கொஞ்சம் பயம்தான். எவ்வளவு வேலை இருந்தாலும், ஒவ்வொரு நாளும் மைதிலியிடம் கொஞ்ச நேரமாவது சாமிநாதன் பேசாமல் இருக்க மாட்டார். மைதிலியுடன் சேர்ந்துதான் காலையிலும் இரவிலும் சாப்பிடுவார். கல்லூரியிலிருந்து மைதிலி வீட்டிற்கு வர எவ்வளவு நேரமானலும் காத்திருப்பார். வீட்டில் எல்லா வேலைகளையும் செய்வதற்கு ஆட்கள் இருந்தாலும், தன் கணவருக்கும் பெண்ணுக்கும் என்னவெல்லாம் பிடிக்குமோ அவற்றையெல்லாம் தன் கையாலே செய்தால்தான் மீனாட்சிக்குத் திருப்தி. அதனால்,